புதன், 31 ஆகஸ்ட், 2016

கணபதி வணக்கம்




                            நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
                            அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
                            தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
                            நம்பிக்கை உண்டே நமக்கு.



சம்பிரமிகு கீரனூர் தன்னில்வளர் ஆதியை
சவுரியம்மிகு அந்துவகுலனை
தன்னில்வளர் காடையைக் கீரனை விலையனை
தர்மமிகு தேவேந்திரனை
நாளும் இரட்சித்தருளும் செல்லப்பிள்ளையாரும்
சீர்கொண்ட வடிவுற்ற ஆதீச லிங்கரும்
தேவிஅகி லாண்டவல்லி
செந்தில்வடி வேல்முருகர் கந்தவேள் குமரனே
தெண்டா யுதக்கந்தனே
கார்கொண்ட கருணைபுரி செல்லாண்டி யம்மையும்
கருப்பண்ண சுவாமியாரும்
கரியகுழல் பேச்சியும் துக்காச்சி  அம்மனும்
கருணை விண்ணப்பம் செய்வோமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ...

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்

௳ தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு. இதில் சேரர்களை அக்னி வம்சம் என...