அந்துவ குலத்தார் காணிகள் பல பெற்று சீர்மிக வாழ்ந்து வந்த போதும் தமது குலதேவதையை மறவாமல் வணங்கி வருகின்றனர். குலதெய்வமே குலம் தழைக்கவும், தன் பிள்ளைகள் நலமிக பெற்று விளங்கவும் முதன்மையாய் நிற்கிறது என்பது பெரியோர் வாக்காகும். அதனால் குல தெய்வ வழிபாடு மிக இன்றியமையாதது ஆகும்.
நமது கோத்திரத்தாருக்கு செல்லாண்டி அம்மனே முதற் குல தெய்வமாக விளங்கி வருகிறாள். ஒரு சில காணிகளில் உரிமை பெற்ற வகையில் அக்காணி தேவதையையும் தமது தெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர்.
செல்லாண்டி அம்மன், செல்வநாயகி, செல்லி அம்மன், செல்லி ஆயி,, செல்வி என்பன ஒருபொருள் கொண்ட பல பெயர்கள் ஆம்.
காணியாட்சிக் கோவில்கள்:
அந்துவன் குலத்தார் ஆதி காணி வெங்கால நாட்டில் கரூவூர் அருகிலுள்ள நாகம்பள்ளி ஆகும். இவ்வூரின் பழமை பற்றி பழநாகம்பள்ளி என்றழைக்கப் படுகிறது. அமராவதி என்னும் ஆண்பொருணை ஆற்றங்கரையில் அமைந்து செல்லாண்டி அம்மன் என்னும் நாமம் கொண்டு தம் குல மக்களுக்கு அருள்பாலிக்கிறாள் அன்னை.
அந்துவன் குலத்தார் பழங்காணிகளில் மற்றொன்று காங்கேய நாட்டு கீரனூர் ஆகும். இங்கு தாயார் செல்வநாயகி என்னும் பிரபல நாமம் தரித்து தம் மக்களுக்கு அருள் பாலித்து வருகிறாள்.
மோடமங்கலத்தில் செல்லி அம்மனாக அமர்ந்து அந்துவ குல மக்களுக்கு அருளும் நலமும் சேர்த்து வருகிறாள் அன்னை.
கோவில்பாளையத்தில் கவைய காளியம்மனை வழிபட்டு சீரும் சிறப்புமாய் அந்துவ குலத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
நமது பழமையான காணிகளில் ஒன்றான அஞ்சியூரில் (தற்போது அஞ்சூர்) அந்துவ கூட்ட மக்கள் அழகுநாச்சி தாயாரை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
காணிகள் பலவாயினும் நமது முன்னோர் வழிவழியாய் வழிபட்டு வந்த காணிக்குச் சென்று வழிபடுவதே உத்தமம். வருடம் ஒரு முறையேனும் குலதெய்வத்தை தரிசித்து வணங்கி வழிபட்டு வருதல் வாழ்வில் மேன்மையை அளிக்கும்.
நமது கோத்திரத்தாருக்கு செல்லாண்டி அம்மனே முதற் குல தெய்வமாக விளங்கி வருகிறாள். ஒரு சில காணிகளில் உரிமை பெற்ற வகையில் அக்காணி தேவதையையும் தமது தெய்வமாக ஏற்று வழிபட்டு வருகின்றனர்.
செல்லாண்டி அம்மன், செல்வநாயகி, செல்லி அம்மன், செல்லி ஆயி,, செல்வி என்பன ஒருபொருள் கொண்ட பல பெயர்கள் ஆம்.
காணியாட்சிக் கோவில்கள்:
- நாகம்பள்ளி - செல்லாண்டி அம்மன்
அந்துவன் குலத்தார் ஆதி காணி வெங்கால நாட்டில் கரூவூர் அருகிலுள்ள நாகம்பள்ளி ஆகும். இவ்வூரின் பழமை பற்றி பழநாகம்பள்ளி என்றழைக்கப் படுகிறது. அமராவதி என்னும் ஆண்பொருணை ஆற்றங்கரையில் அமைந்து செல்லாண்டி அம்மன் என்னும் நாமம் கொண்டு தம் குல மக்களுக்கு அருள்பாலிக்கிறாள் அன்னை.
- கீரனூர் - செல்வநாயகி அம்மன்
அந்துவன் குலத்தார் பழங்காணிகளில் மற்றொன்று காங்கேய நாட்டு கீரனூர் ஆகும். இங்கு தாயார் செல்வநாயகி என்னும் பிரபல நாமம் தரித்து தம் மக்களுக்கு அருள் பாலித்து வருகிறாள்.
- மோடமங்கலம் - செல்லியம்மன்
மோடமங்கலத்தில் செல்லி அம்மனாக அமர்ந்து அந்துவ குல மக்களுக்கு அருளும் நலமும் சேர்த்து வருகிறாள் அன்னை.
- கோவில்பாளையம் - கவையகாளியம்மன்
கோவில்பாளையத்தில் கவைய காளியம்மனை வழிபட்டு சீரும் சிறப்புமாய் அந்துவ குலத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
- அஞ்சியூர் - அழகுநாச்சியம்மன்
காணிகள் பலவாயினும் நமது முன்னோர் வழிவழியாய் வழிபட்டு வந்த காணிக்குச் சென்று வழிபடுவதே உத்தமம். வருடம் ஒரு முறையேனும் குலதெய்வத்தை தரிசித்து வணங்கி வழிபட்டு வருதல் வாழ்வில் மேன்மையை அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ...